இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் வெகுளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது. சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி, பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
வெகுளாமை 2
- ஆறாவது குறள்.
“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்”.
இதில்
‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி‘
இதன் பொருள்
சேர்ந்தாரைக் கொல்லும் சினம் என்ற நெருப்பு.
அடுத்து
‘இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்‘
இதன் பொருள்
தன்னை மட்டுமின்றி தனக்குத் துணையாக இருப்பவர்களையும் எரித்து விடும்.
அதாவது
சேர்ந்தாரைக் கொல்லும் சினம் என்ற நெருப்பு, தன்னை மட்டுமின்றி தனக்குத் துணையாக இருப்பவர்களையும் எரித்து விடும்.
வெகுளாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று“.
இதில்
‘கோபத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு‘
இதன் பொருள்
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல்.
அடுத்து
‘நிலத்தறைந்தான் கைபிழையா தற்று‘
இதன் பொருள்
நிலத்தை அறைந்தவனின் கை வேதனையிலிருந்து தப்ப முடியாததைப்போல் ஆகும்.
அதாவது
கோபத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தை அறைந்தவனின் கை வேதனையிலிருந்து தப்ப முடியாததைப்போல் ஆகும்.
வெகுளாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
\”இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று“.
இதில்
‘இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்‘
இதன் பொருள்
பல சுடர்களை உடைய பெரிய நெருப்பு ஒன்றாகச் சேர்ந்தது போலத் துன்பத்தை ஒருவன் கொடுத்தாலும்.
அடுத்து
‘புணரின் வெகுளாமை நன்று‘
இதன் பொருள்
அவன் மேல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது.
அதாவது
பல சுடர்களை உடைய பெரிய நெருப்பு ஒன்றாகச் சேர்ந்தது போலத் துன்பத்தை ஒருவன் கொடுத்தாலும் அவன் மேல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது.
வெகுளாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்“.
இதில்
‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும்‘
இதன் பொருள்
நினைத்த நன்மைகளை எல்லாம் ஒருங்கே பெறுவான்.
அடுத்து
‘உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்‘
இதன் பொருள்
ஒருவன் தன் மனத்தில் கோபத்தை ஒருபோதும் நினைக்காமலிருந்தால்.
அதாவது
ஒருவன் தன் மனத்தில் கோபத்தை ஒருபோதும் நினைக்காமலிருந்தால், நினைத்த நன்மைகளை எல்லாம் ஒருங்கே பெறுவான்.
வெகுளாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை”.
இதில்
‘இறந்தார் இறந்தார் அனையர்‘
இதன் பொருள்
அதிக கோபம் உடையவர் இறந்தவரைப் போன்றவர்.
அடுத்து
‘சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை’
இதன் பொருள்
சினத்தை அடியோடு துறந்தவர் அனைத்தையும் துறந்தவர்க்குச் சமமானவர்.
அதாவது
அதிக கோபம் உடையவர் இறந்தவரைப் போன்றவர். சினத்தை அடியோடு துறந்தவர் அனைத்தையும் துறந்தவர்க்குச் சமமானவர்.
வெகுளாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்த பகுதியில் திருக்குறளின் 32வது அதிகாரமான இன்னா செய்யாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம்.
நன்றி! வணக்கம்!