நிலையாமை 1

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 34வது அதிகாரமான நிலையாமை. நிலையாமை என்றால் எதுவும் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்பது உறுதியில்லை. எதுவும் நிலையானதில்லை என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

நிலையாமை 1

  • முதல் குறள்.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
“.
இதில்
‘நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை
இதன் விளக்கம்
நிலையில்லாத பொருள்களை நிலையானவை என்று கருதுகின்ற புல்லறிவு
அடுத்து
கடை
இதன் பொருள்
துறந்தோர்க்கு இழிவு ஆகும்.

அதாவது
நிலையில்லாத பொருள்களை நிலையானவை என்று கருதுகின்ற புல்லறிவு துறந்தோர்க்கு இழிவு ஆகும்.

நிலையாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
“.
இதில்
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
இதன் பொருள்
பெரிய செல்வம் வந்து சேர்வது கூத்தாட்டத்தைக் காண வரும் கூட்டம் போல் ஆகும்.
அடுத்து
போக்கும் அதுவிளிந் தற்று
இதன் விளக்கம்
அச்செல்வம் நீங்குவதும் கூத்து முடிந்த பின் கலைந்து செல்லும் கூட்டம் போல் ஆகும்.

அதாவது
பெரிய செல்வம் வந்து சேர்வது கூத்தாட்டத்தைக் காண வரும் கூட்டம் போல் ஆகும். அச்செல்வம் நீங்குவதும் கூத்து முடிந்த பின் கலைந்து செல்லும் கூட்டம் போல் ஆகும்.

நிலையாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
“.
இதில்
அற்கா இயல்பிற்றுச் செல்வம்
இதன் பொருள்
நிலை இல்லாத இயல்புடையது செல்வம்.
அடுத்து
அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்
இதன் பொருள்
எனவே அந்த செல்வம் கிடைத்தால் அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

அதாவது
நிலை இல்லாத இயல்புடையது செல்வம். எனவே அந்த செல்வம் கிடைத்தால் அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

நிலையாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
“.
இதில்
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது
இதன் பொருள்
நாள் என்பது ஓர் அளவுகோல்.உயிரை உடம்பிலிருந்து பிரிக்கும் வாளாக அது உள்ளது.
அடுத்து
உணர்வார்ப் பெறின்
இதன் பொருள்
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள் அதை அறிவார்கள்.

அதாவது
நாள் என்பது ஓர் அளவுகோல்.உயிரை உடம்பிலிருந்து பிரிக்கும் வாளாக அது உள்ளது. வாழ்க்கையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள் அதை அறிவார்கள்.

நிலையாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்”.

இதில்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்’
இதன் பொருள்
பேச முடியாதபடி நாவை அடக்கி விக்கல் வருவதற்கு முன்னே, அதாவது இறப்பதற்கு முன்
அடுத்து
நல்வினை மேற்சென்று செய்யப் படும்
நல்ல அறச்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

அதாவது
பேச முடியாதபடி நாவை அடக்கி விக்கல் வருவதற்கு முன்னே, அதாவது இறப்பதற்கு முன், நல்ல அறச்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நிலையாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி! வணக்கம்!

 

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts