கொல்லாமை 1

திருக்குறளின் 33வது அதிகாரம் கொல்லாமை. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கப்போகிறோம்.

கொல்லாமை என்பதன் பொருள் வாழ்க்கையில் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. கொல்லாமை சிறந்த அறம் என்று வலியுறுத்துகிறது.

கொல்லாமை 1

  • முதல் குறள்.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்”
.
இதில்
அறவினை யாதெனின் கொல்லாமை
இதன் பொருள்
அறமாகிய செயல் எது என்றால் அது ஓர் உயிரையும் கொல்லாமல் இருப்பது.
அடுத்து
கோறல் பிறவினை எல்லாந் தரும்
இதன் பொருள்
அவ்வாறு பிற உயிர்களைக் கொல்லுதல் பாவங்களைத் தரும்.

அதாவது
அறமாகிய செயல் எது என்றால் அது ஓர் உயிரையும் கொல்லாமல் இருப்பது. அவ்வாறு பிற உயிர்களைக் கொல்லுதல் பாவங்களைத் தரும்.

கொல்லாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
“.
இதில்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’
இதன் பொருள்
தானும் உண்டு பலருக்குப் பகுத்துக் கொடுத்து எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல்
அடுத்து
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை‘.
இதன் பொருள்
அறநூலோர் தொகுத்த அறங்களில் தலையாய அதாவது முதலான அறம் ஆகும்.

அதாவது
தானும் உண்டு பலருக்குப் பகுத்துக் கொடுத்து எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலோர் தொகுத்த அறங்களில் தலையாய அதாவது முதலான அறம் ஆகும்.

கொல்லாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
“.
இதில்
ஒன்றாக நல்லது கொல்லாமை’
இதன் பொருள்
பிற உயிர்களைக் கொல்லாமை இணையில்லாத சிறந்த அறமாகும்.
அடுத்து
மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று’
இதன் பொருள்
அடுத்த சிறந்த அறம் பொய்யாமை ஆகும்.

அதாவது
பிற உயிர்களைக் கொல்லாமை இணையில்லாத சிறந்த அறமாகும். அடுத்த சிறந்த அறம் பொய்யாமை ஆகும்.

கொல்லாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
“.
இதில்
நல்லாறு எனப்படுவது யாதெனின்
இதன் பொருள்
நல்ல நெறி என்று சொல்லப்படுவது எது என்றால்.
அடுத்து
‘யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி’
இதன் பொருள்
அது எந்த உயிரையும் கொல்லாத அறத்தினைப் போற்றும் நெறி ஆகும்.

அதாவது
நல்ல நெறி என்று சொல்லப்படுவது எது என்றால், அது எந்த உயிரையும் கொல்லாத அறத்தினைப் போற்றும் நெறி ஆகும்.

கொல்லாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
“.
இதில்
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம்
இதன் பொருள்
பிறவாமை பொருட்டு ஆசைகளைத் துறந்தவர்களில் எல்லாம்
அடுத்து
கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை
இதன் பொருள்
கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள்.

அதாவது
பிறவாமை பொருட்டு ஆசைகளைத் துறந்தவர்களில் எல்லாம், கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள்.

கொல்லாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது.
கொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts