இன்னா செய்யாமை 2

திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை போன பகுதியில் பாரத்தோம். இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.

இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.

இன்னா செய்யாமை 2

  • ஆறாவது குறள்.

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
“.
இதில்
இன்னா எனத்தான் உணர்ந்தவை
இதன் பொருள்
தனக்குத் துன்பம் தருபவை என்று அறிந்தவற்றை.
அடுத்து
துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்
இதன் பொருள்
மற்றவர்க்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

அதாவது
தனக்குத் துன்பம் தருபவை என்று அறிந்தவற்றை மற்றவர்க்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.

  • ஏழாவது குறள்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
“.
இதில்
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்
இதன் பொருள்
எக்காலத்திலும் எவருக்கும் சிறிதே ஆயினும்.
அடுத்து
மனத்தானாம் மாணாசெய் யாமை தலை’
இதன் பொருள்
மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பம் தரும் செயல்களைச் செய்யாமல் இருப்பது சிறந்த அறம் ஆகும்.

அதாவது
எக்காலத்திலும் எவருக்கும் சிறிதே ஆயினும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பம் தரும் செயல்களைச் செய்யாமல் இருப்பது சிறந்த அறம் ஆகும்.

இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.

  • எட்டாவது குறள்.

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
“.
இதில்
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான்
இதன் பொருள்
பிறர் தனக்குச் செய்யும் துன்பங்களை அனுபவித்து அறிந்தவன்.
அடுத்து
என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்
இதன் பொருள்
பிற உயிர்களுக்குத் தீமை செய்ய நினைப்பது என்ன காரணத்தால்?

அதாவது
பிறர் தனக்குச் செய்யும் துன்பங்களை அனுபவித்து அறிந்தவன், பிற உயிர்களுக்குத் தீமை செய்ய நினைப்பது என்ன காரணத்தால்?

இன்னா செய்யாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்”
.
இதில்
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
இதன் பொருள்
முற்பகலில் பிறர்க்கு தீமையை செய்தால்.
அடுத்து
தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்
இதன் பொருள்
நமக்குப் பிற்பகலில் துன்பம் தாமே தேடி வரும்.

அதாவது
முற்பகலில் பிறர்க்குத் தீமையைச் செய்தால் நமக்குப் பிற்பகலில் துன்பம் தாமே தேடி வரும்.

இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
“.
இதில்
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்
இதன் பொருள்
துன்பமெல்லாம் பிறர்க்குத் துன்பம் செய்பவரையே சார்ந்ததாகும்.
அடுத்து
நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்’
இதன் பொருள்
ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் பிறர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்கள்.

அதாவது
துன்பமெல்லாம் பிறர்க்குத் துன்பம் செய்பவரையே சார்ந்ததாகும். ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் பிறர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்கள்.

இன்னா செய்யாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.

இந்த குறளோடு இந்த அத்தியாயம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் கொல்லாமை.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts