மெய்யுணர்தல் – 2

திருக்குறளின் மெய்யுணர்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். மெய்யுணர்தல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பொருளோடு பார்ப்போம். மெய் என்ற சொல்லுக்கு உண்மை, உடல் என்று பொருள் சொல்லலாம். இந்த உலகில் நம் பிறப்பிற்கும், முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்.

மெய்யுணர்தல் – 2

  • ஆறாவது குறள்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”.

இதில்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்
இதன் பொருள்
கற்க வேண்டியதைக் கற்று மெய் உணர்ந்தவர்கள்
அடுத்து
தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி’
இதன் பொருள்
மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவார்கள்.

அதாவது
கற்க வேண்டியதைக் கற்று மெய் உணர்ந்தவர்கள், மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவார்கள்.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.

  • ஏழாவது குறள்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு”.

இதில்
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்’
இதன் பொருள்
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து மெய்ப்பொருளை உறுதியாக உணர்ந்தால்
அடுத்து
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
இதன் பொருள்
அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளது என்று எண்ண வேண்டாம்.

அதாவது
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து மெய்ப்பொருளை உறுதியாக உணர்ந்தால் அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளது என்று எண்ண வேண்டாம்.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.

  • எட்டாவது குறள்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”.

இதில்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச்
இதன் பொருள்
பிறப்புக்குக் காரணமான அறியாமை நீங்க
அடுத்து
சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு
இதன் பொருள்
பிறவாமைக்குக் காரணமாகிய உண்மைப்பொருளைக் காண்பதே மெய்யுணர்வாகும்.

அதாவது
பிறப்புக்குக் காரணமான அறியாமை நீங்கப் பிறவாமைக்குக் காரணமாகிய உண்மைப்பொருளைக் காண்பதே மெய்யுணர்வாகும்.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்”.
இதில்

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்
இதன் பொருள்
ஒருவன் எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து இருவகைப் பற்றின்றி வாழ்ந்தால்
அடுத்து
மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்
இதன் பொருள்
சார்வதற்குரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையாது.

அதாவது
ஒருவன் எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து இருவகைப் பற்றின்றி வாழ்ந்தால் சார்வதற்குரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையாது.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
“.
இதில்
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்’
நாமம் கெட
இதன் பொருள்
ஆசை, வெகுளி, மயக்கம் இந்த மூன்று குற்றங்களும் உள்ளத்தில் இல்லாது போனால்
அடுத்து
கெடும் நோய்’
இதன் பொருள்
அதனால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

அதாவது
ஆசை, வெகுளி, மயக்கம் இந்த மூன்று குற்றங்களும் உள்ளத்தில் இல்லாது போனால் அதனால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.

இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் அவாவறுத்தல்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts