திருக்குறளின் 35வது அதிகாரம் துறவு. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும், சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது, இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி, பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

துறவு 1

  • முதல் குறள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”
.
இதில்
யாதனின் யாதனின் நீங்கியான்
இதன் பொருள்
ஒருவன் எந்த எந்தப் பொருள்களின் மேல் உள்ள பற்றை நீக்கியவனாக இருக்கின்றானோ.
அடுத்து
நோதல் அதனின் அதனின் இலன்’
இதன் பொருள்
அந்தந்தப் பொருள்களால் வரும் துன்பத்தை அடைய மாட்டான்.

அதாவது
ஒருவன் எந்த எந்தப் பொருள்களின் மேல் உள்ள பற்றை நீக்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருள்களால் வரும் துன்பத்தை அடைய மாட்டான்.

துறவு அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது. 

  • இரண்டாவது குறள்.

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல”
.
இதில்
வேண்டின்உண் டாகத் துறக்க
இதன் பொருள்
துன்பம் இல்லாத நிலை வேண்டும் என்றால் காலம் அறிந்து துறக்க வேண்டும்.
அடுத்து
துறந்தபின் ஈண்டுஇயற் பால பல’
இதன் பொருள்
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தால் வரும் இன்பங்கள் பல.

அதாவது
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தால் வரும் இன்பங்கள் பல. துன்பம் இல்லாத நிலை வேண்டும் என்றால் காலம் அறிந்து துறக்க வேண்டும்.

துறவு அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
“.
இதில்
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை
இதன் பொருள்
ஐம்பொறிகளுக்குரிய ஐம்புலன்களை அடக்கி ஆசைகளை வெல்ல வேண்டும்.
அடுத்து
விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு
இதன் பொருள்
அப்படி அடக்குவதற்கு விரும்பிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட்டு விட வேண்டும்.

அதாவது
ஐம்பொறிகளுக்குரிய ஐம்புலன்களை அடக்கி ஆசைகளை வெல்ல வேண்டும். அப்படி அடக்குவதற்கு விரும்பிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட்டு விட வேண்டும்.

துறவு அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து”
.
இதில்
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை’
இதன் பொருள்
எதிலும் பற்றில்லாமல் இருப்பது தவம் செய்பவர்களின் இயல்பாகும்.
அடுத்து
உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து
இதன் பொருள்
எதன் மேலாவது பற்று வைத்தால் மீண்டும் மயங்குவதற்குக் காரணமாகிவிடும்.

அதாவது
எதிலும் பற்றில்லாமல் இருப்பது தவம் செய்பவர்களின் இயல்பாகும். எதன் மேலாவது பற்று வைத்தால் மீண்டும் மயங்குவதற்குக் காரணமாகிவிடும்.

துறவு அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
“.
இதில்
‘மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்’
இதன் பொருள்
ஆகையால் வேறு பொருள்களின் மேல் தொடர்பு எதற்கு?
அடுத்து
பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை
பிறவாமல் இருக்கப் பிறப்பை அறுக்க முயல்கின்றவர்க்கு உடம்பே மிகையான பொருள் ஆகும்.

அதாவது
பிறவாமல் இருக்கப் பிறப்பை அறுக்க முயல்கின்றவர்க்கு உடம்பே மிகையான பொருள் ஆகும். ஆகையால் வேறு பொருள்களின் மேல் தொடர்பு எதற்கு?

துறவு அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts