திருக்குறளின் வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை போன பகுதியில் பார்த்தோம். வாய்மை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும். வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
வாய்மை 2
- ஆறாவது குறள்.
“பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்”.
இதில்
‘பொய்யாமை அன்ன புகழில்லை‘
இதன் பொருள்
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழுக்குக் காரணமாக வேறு எதுவும் இல்லை.
அடுத்து
‘எய்யாமை எல்லா அறமுந் தரும்‘
இதன் பொருள்
பொய்யாமை ஒருவனுக்கு அவன் அறியாமலே எல்லா அறமும் தரும்.
அதாவது
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழுக்குக் காரணமாக வேறு எதுவும் இல்லை. பொய்யாமை ஒருவனுக்கு அவன் அறியாமலே எல்லா அறமும் தரும்.
வாய்மை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று“.
இதில்
‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின்‘
இதன் பொருள்
ஒருவன் பொய்யாமையை உண்மையாகவே பின்பற்றி வாழ முடிந்தால்
அடுத்து
‘அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று‘
இதன் பொருள்
அவன் மற்ற அறங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
அதாவது
ஒருவன் பொய்யாமையை உண்மையாகவே பின்பற்றி வாழ முடிந்தால்,
அவன் மற்ற அறங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
வாய்மை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்”.
இதில்
‘புறத்தூய்மை நீரான் அமையும்‘
இதன் பொருள்
உடலின் தூய்மை நீராலே அமையும்.
அடுத்து
‘அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்‘
இதன் பொருள்
அது போல உள்ளத்தின் தூய்மை வாய்மையால் மட்டுமே உண்டாகும்.
அதாவது
உடலின் தூய்மை நீராலே அமையும். அது போல உள்ளத்தின் தூய்மை வாய்மையால் மட்டுமே உண்டாகும்.
வாய்மை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”
இதில்
‘எல்லா விளக்கும் விளக்கல்ல’
இதன் பொருள்
புறத்தில் இருக்கும் இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல.
அடுத்து
‘சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு‘
இதன் பொருள்
சான்றோர்க்கு அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமையே விளக்கு ஆகும்.
அதாவது
புறத்தில் இருக்கும் இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமையே விளக்கு ஆகும்.
வாய்மை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”.
இதில்
‘யாமெய்யாக் கண்டவற்றுள்’
இதன் பொருள்
யாம் சிறந்தவை என்று கண்டு அறிந்த நூல்களில் சொல்லப்பட்டவற்றில்
அடுத்து
‘இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற‘
இதன் பொருள்
வாய்மையை விடச் சிறந்த அறம் வேறு ஒன்றும் இல்லை என்பதாகும்.
அதாவது
யாம் சிறந்தவை என்று கண்டு அறிந்த நூல்களில் சொல்லப்பட்டவற்றில், வாய்மையை விடச் சிறந்த அறம் வேறு ஒன்றும் இல்லை என்பதாகும்.
வாய்மை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் வெகுளாமை.
நன்றி! வணக்கம்!